Thursday, December 31, 2009

அனுதின மன்னா Dec 31

நம்முடைய காலங்கள்

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25)

இரு வாலிபர்கள் (ஒருவன் விசுவாசி, மற்றவன் அவிசுவாசி) ஒரு மலையின் மேல் நடந்துப் போய்க் கொணடிருந்தார்கள். அப்போது விசுவாசியான வாலிபன், கர்த்தருடைய அநாதி திட்டங்களையும், அவருடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் பேசிக் கொண்டே இருவரும் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு எந்தவித கவலையும் இல்லை ஏனென்றால் என்னுடைய நடைகளை அவர் தீர்மானிக்கிறார். அவருடைய பாதுகாப்பு எனக்கு இருப்பதால் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை’ என்று விசுவாசியான வாலிபன் கூறினான்.


அதற்கு அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில் வளர்ந்து இருகக்றது. அதையும் கர்த்தர்தான் வைத்தார் என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் கொல்கிறாய்’ என்று அந்த மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன் நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான். இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள்.


விசுவாசியான வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு, தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும் முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும் மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல் தொடர்ந்தனர். தேவன்அவிசுவாசியான வால்பனோடு பேச ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு ஊழியக்காரனாக அவன் மாறினான்.


நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலுள்ள ஒரு முடியும் கீழே விழுவதில்லை. நட்சத்ரங்களையே பெயர் சொல்லி அழைக்கிற தேவன் அவைகளை பார்க்கிலும் விசேஷித்தவர்களாகிய நம்முடைய தேவைகளையும் வாஞ்சைகளையும் நிறைவேற்ற வல்லவராகவே இருக்கிறார். ‘இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்’ - (லூக்கா.12:6,7) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆகையால் எதைக் குறித்தும் கவலைப்படாமல், அவரை சார்ந்து ஜீவிப்போம். யெகோவாயீரேவாகிய அவர் நம்மை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென்.


ஜெபம்:
எங்கள் அன்பின் பரம பிதாவே, நாங்கள் எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லாவற்றிற்கும் உம்மையே சார்ந்து ஜீவிக்க உதவி செய்யும். எங்களை நீர் விசேஷித்தவர்களாக வைத்திருக்கிற தயவுக்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் தேவைகளை நீர் சந்திக்கிறதற்காக ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Wednesday, December 30, 2009

அனுதின மன்னா Dec 30

ஊருக்கு புதுசு

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் .- (1கொரிந்தியர் 11:1).

ஒரு புதிய மிஷனெரி வெனிசூலா தேசத்திற்கு ஊழியத்திற்காகச் சென்றார். அவருக்கு அந்த தேசத்தின் மொழி எதுவும் தெரியாது. என்ன செய்வது என்று தெரியாமல் முதலாவது ஆலயத்திற்கு செல்லலாம் என்று எண்ணி, ஆலயத்திறகு சென்றார். ஆனால் வழி தெரியாமல் தடுமாறி, மீண்டும், தேடி கண்டுபிடித்து, சரியாக ஆலயத்திற்கு சென்ற போது, ஆலயம் நிரம்பி இருந்தது. அவருக்கு முதலாம் இருக்கையில் மாத்திரம் ஒரு பெஞ்சில் இடம் இருந்தது. அந்த இடத்தில் போய் அமர்ந்துக் கொண்டார். அவர் நினைத்தார், தனக்கு மொழி தெரியாததால், தன் பக்கத்தில் இருப்பவர் எழுந்து நிற்கும்-போது தானும் நிற்கவும், அவர் அமரும்போது தானும் அமரவும் செய்யலாம் என்று அப்படியே செய்ய ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்தவர் எழுந்தபோதெல்லாம் அவரும் எழுந்தார். அவர் அமர்ந்த போது இவரும் அமர்ந்தார். பின் போதகர் எழுந்து பேச ஆரம்பித்தார். அப்போது இவர் நினைத்தார். அவர் அறிக்கை சொல்கிறார்ப் போலும் என்று. அவர் பேசும் போது பக்கதில் இருந்தவர் எழுந்து நின்றார். அதைக்கண்ட மிஷனெரியும் எழுந்து நின்றார். உடனே சபையில் ஒரு சலசலப்பு எழுந்தது. இவர் பின்னால் திரும்பிப் பார்த்தார். யாரும் நிற்கவில்லை. உடனே தான் அமர்ந்துக் கொண்டார்.



பின் சபை முடிந்தவுடன் எல்லாரும் போதகருக்கு கைக் கொடுத்து வெளியே செல்லும்போது இவரும் போதகருக்குக் கை கொடுத்ததார். போதகர் கேட்டார் ஆங்கிலத்தில், என்ன தம்பி நீங்க ஊருக்கு புதுசு போல’ என்று. உடனே ஊழியர் ‘ஆம்! அது அவ்வளவு அப்பட்டமாகத் தெரிகிறதா’ என்றுக் கேட்டார். அதற்கு போதகர், ‘ஆம் தம்பி, நான் இந்த மாதத்தில் பிறந்த புதுக் குழந்தையின் தந்தையை எழுந்து நிற்கச் சொன்னேன், நீங்கள் எழுந்து நின்றீர்கள்!’ என்றாரே பார்க்க வேண்டும்!


நாம் யாரை பின்பற்றுகிறோம் என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். மனிதனை பின்பற்றினால் விழுந்துப் போய்விடுவோம். கிறிஸ்துவே நமக்கு மாதிரி. அவரே நமக்கு மாதிரியை பின் வைத்துப் போனார். ‘ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்’ - (1பேதுரு2:21). அப்போஸ்தனாகிய பவுலைப் போல தைரியமாக நான் கிறிஸ்துவைப்பின்பற்றுவதுப் போல என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லக் கூடுமானால், அவரைப் போல பரிசுத்தமாக,சுவிசேஷத்தினிமித்தம் பாடுகள் பலப் பட்டு, தன் ஜீவனையும் கொடுக்க தயாராயிருந்தால் நாம் பின்பற்றலாம். கர்த்தரே நமக்கு முன்மாதிரி. அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் - (எபிரேயர். 12:2). அவரையே பின்பற்றுவோம். அவருடைய மாதிரியின்படியே செய்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.


கண்களை பதிய வைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன்செல்லுவோம்.




ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்களுக்கு எல்லாவிதத்திலும் முன்மாதிரியாக இருக்கிற
இயேசுகிறிஸ்துவையே நாங்கள் பின்பற்றுகிறவர்களாகி, உமக்கு சாட்சியாக நிற்க உதவி செய்யும். எங்களுக்கு வருகிற நிந்தை அவமானங்களில் எல்லாவித விபரீதங்களையும் சகித்த இயேசுவையே நோக்கிப் பார்க்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Tuesday, December 29, 2009

அனுதின மன்னா Dec 29

தசமபாகம்

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்ள அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (மல்கியா 3:10)

ஒரு முறை ஒரு வாலிபன் தன் போதகரிடம் தேவன் தனக்கு ஒரு வேலை தந்தால் தனக்கு வரும் சம்பாத்தியத்தில் எல்லாம் தசமபாகம் தருவதாக பொருத்தனை பண்ணிக் கொண்டான். அதன்படி அவனுக்கு வேலை கிடைத்து முதல் வாரம் பத்து ரூபாய் சம்பளத்தின்படி 1ரூபாய் தசமபாகம் தந்தான். அடுத்த வாரம் 7 ரூபாய் கொடுத்தான். ஒரு மாதத்தில் 10 ரூபாய் கொடுத்தான் அடுத்த மாதம் அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்து, 100 ரூபாய்கொடுத்தான் இப்படி படிப்படியாக முன்னேறி 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டி வந்தது. அப்போது தனது போதகருக்கு போன்பண்ணி, 'வாருங்கள் நான் உங்களிடம் பேச வேண்டும்' என்று அழைத்தான். அவர் வந்தபோது, நான் உங்களோடு ஜெபித்த போது; தசமபாகம் கொடுப்பதாக பொருத்தனை பண்ணினேன். அதிலிருந்து எப்படி மீள்வது? என்றுக் கேட்டான். அதற்கு போதகர் 'எதற்கு மீள வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'நான் முதலில் 1ருபாய் கொடுத்தேன். பின் 10 ரூபாய் கொடுத்தேன் அது சரி, இப்போதோ 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எனக்கு இப்படிக் கொடுத்து கட்டுப்படியாகாது| என்று கூறினான்.


அதற்கு போதகர், 'ஒரு முறை பொருத்தனை பண்ணினால் அதை விடுவது ஆபத்தானது. வேண்டுமென்றால் நாம் ஒன்று செய்யலாம், கர்த்தரை மீண்டும் உன்னை பழைய நிலைக்கே கொண்டுபோய் விடச் சொல்லலாம்' என்றார். அந்த வாலிபன் வாயடைத்து நின்றான்.


தசமபாகம் கொடுப்பதில் நாம் எப்படி இருக்கிறோம்? கர்த்தருக்கு உண்மையாக இருக்கிறோமா? சிலருக்கு வெளிநாடுகளில் சம்பாதித்து அப்படியே கை நிறைய பணம் போகிறதே என்கிற கவலை. இத்தனைக்கும் அவர்கள் கொடுப்பது பத்தில் ஒரு பங்குதான். என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். கடனே வாங்காமல் எல்லா ஆசீட்வாதத்தையும் அனுபவிக்க தேவன் கிருபை செய்திருக்கிறார். பண விஷயத்தில் மாத்திரம் அல்ல, உடல் சுகம் மற்றும் எல்லா விதத்திலும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் காண முடிகிறது. தசமபாகம் கொடுப்பதின் மூலம் கிடைக்கும் ஏழு மடங்கு ஆசீர்வாதத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு காணலாம்:


1. நமது இருதயத்தை கர்த்தருடைய சித்தத்தை
செய்யும்படி ஆசீர்வதிக்கிறது.
2. நமது வாழ்க்கையை தேவகிருபையினால் நாம் எண்ண
முடியாத உயரத்திற்கு கொண்டு வருகிறது
3. நமது கைகளை கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு
தயாராக்குகிறது
4. நமது சிந்தனையில் கர்த்தருக்கென்று சரியான
காரியத்தைச் செய்தோம் என்கிற திருப்தியை தருகிறது.
5. கர்த்தரை கனப்படுத்தியதால் மீதமிருக்கிற ஒன்பது
பகுதிகளும் நமக்கு ஆசீர்வாதமாக்கப்படுகிறது.
6. தனிப்பட்ட ஊழியருக்கு தங்களுடைய ஊழியத்தை
தடையின்று நடத்தப்பட ஆசீர்வாதமாகிறது.
7. சபையானது இன்னும் அதிக அளவில் கர்த்தருடைய
ஊழியத்தை நிறைவேற்ற உதவுகிறது.


இப்படி ஆசீர்வாதங்களைப் பெற காரணமாயிருக்கிற தசமபாகத்தை கர்த்தருக்கு தொடர்ந்து செலுத்துவோம். கர்த்தர் இதன் மூலம் கனப்படுகிறார். நம்மை ஆசீர்வதிப்பார்;


ஜெபம்:
எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்களுடைய தசமபாகத்தை உமக்கு தடையின்றி கொடுக்க எங்கள் இருதயங்களை ஏவியருளும். அவற்றை உமது நாம் மகிமைக்காக பயன்படுத்தும். இதன்மூலம் நீர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் எங்களை ஆசீவதிப்பதற்காக நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Monday, December 28, 2009

அனுதின மன்னா Dec 28

பிளவுண்ட மலை

என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன் - (யாத்திராகமம் 33:22).



அகஸ்டஸ் டாப்லாடி என்னும் தேவ மனிதன், தனது 16ஆவது வயதில் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அவரது 16ஆவது வயதில், மாம்ஸ் மோரிஸ் என்னும் ஆத்ம பாரம் கொண்ட தெருவில் பிரசங்கம் செய்யும் ஊழியர் நடத்திய சிறுக் கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டார். அந்த ஊழியர் எபேசியர் 2:13 ம் வசனத்திலிருந்து சத்தியத்தை பகிர்ந்துக் கொண்டார். ‘முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்’ என்னும் இந்த வார்த்தைகள் அவருக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது. அவர் அப்போதே தம்மை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்து, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.



சிலவருடங்கள் கழித்து, அவர் ஒரு சூறாவளிப் புயலில் சிக்கிக் கொண்டார். எங்கு பத்திரமாக இருப்பது என்று தெரியாத நிலையில், அங்கு ஒரு பாறையையும் அதில், ஒரு பிளவு இருப்பதையும் கண்டார். அந்தப் பிளவில் புயல் ஓயுமட்டும் தங்கி இருந்து, தப்பித்தார். தனக்கு அந்த புகலிடத்தைக் கொடுத்த தேவனை துதிக்கையில், கன்மலையான கிறிஸ்துவும, தமக்காக பிளக்கப்பட்ட அவரது சரீரமும் அவருடைய கண்முன் தோன்றியது. அங்கேதானே இந்தப் பாடலை எழுத ஆரம்பித்தார். ‘பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே’. இந்த நாளிலும் நாம் இந்தப் பாடலை பாடி நம் கன்மலையாகிய கிறிஸ்துவை நினைவு கூர்ந்து துதிக்கிறோம். நமக்கு ஒரு புகலிடம் உண்டு. நம் வேதனையில், நம் துனபங்களில்

நம்மை மறைத்து புயல் நீங்கும் வரை தம்முடைய கரத்தின் மறைவில் மறைத்து பாதுகாக்கும் தேவன் நமக்கு உண்டு. கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். (ஏசாயா 25:4). ஆம் நம் தேவனே நமக்கு பெலனும், திடனும், அடைக்கலமும் கோட்டையுமானவர். அவரின செட்டைகளின் நிழலிலே களிகூறுகிறோம். இந்தச் சீரைப் பெற்ற ஜனமாகிய நாம் எவ்வளவு பாக்கியம் பெற்றுள்ளோம்! ஆமென்.


பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே

பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவ தோஷம் யாவுமே நீக்கும்படி அருளும்




ஜெபம்:

எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய கர்த்தாவே, சத்துரு வெள்ளம் போல வரும் போது அவனுக்கு எதிராக கொடி ஏற்றுபவரே, உம்மைத் துதிக்கிறோம். பிளவுண்ட மலையாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நாங்கள் அடைக்கலம் புகுந்துக் கொள்கிறோம். உம்முடைய நாமத்திற்கே மகிமை செலுத்துகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Sunday, December 27, 2009

அனுதின மன்னா Dec 27

மன்னிப்பு

எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள் - (லூக்கா 6:27).


கோரி டென் பூம் என்பவர் தனது தந்தை சகோதரி பெட்ஸியுடன் ஹாலந்தில் வசித்து வந்தார். அந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. ஹிட்லர் ஐரோப்பிய யூதர்களை துன்றுத்த ஆரம்பித்தான். ஆயிரமாயிரமான யூதர்களை நச்சுவாயு கூண்டுக்குள் அடைத்து கொலை செய்தான். பூம் அவர்களின் குடும்பம் அப்படித் தவித்த யூதர்களை தங்கள் வீட்டிற்குள் அடைக்கலம் கொடுத்து, ஆதரித்தனர்.


இதைக் கேள்வியுற்ற ஹிட்லரின் ராணுவம் மூவரையும் கைது செய்து, 'கான்சன்ட்ரஷன் கேம்ப்' என்னும் கேம்பில் வைத்து வாதை செய்தனர். அவர்களது தந்தை சிறிது காலத்தில் மரித்தார். அதற்கு பின்பு இளவயதான கோரியும் அவரது சகோரியான பெட்ஸியும் அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. காவலர்கள் முன்பு நிர்வாணமாய நடக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர். அடிகளும் உதைகளும், உணவு தராமல் சித்தரவதை செய்யப்பட்டனர். இவற்றை தாங்கமுடியாமல் பெட்ஸி மரித்தார்கள். கோரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தபடியினால், எல்லாவற்றையும் பொறுமையாக சகித்து, நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்கள்.


உலகப் போர் முடிந்து, கோரி விடுதலையாக்கப்பட்டார். அதன்பின் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் சென்று கிறிஸ்துவின் அன்பையும், தான் நாசிக் கேம்பில் பட்ட பாடுகளை விவரித்து, கிறிஸ்துவின் அன்பினால் தான் நிலைநிற்பதாகவும் கூறினார். மியூனிச் என்னுமிடத்தில் நடந்தக் கூட்டத்தில், அவர் இயேசுகிறிஸ்துவின் அனபையும் அவரது மனனிப்பையும், நமது பாவங்களை கடலின் ஆழத்தில் எறிந்து பின் அதை அவர் நிளைப்பதில்லை என்றும், தான் பட்ட கஷ்டங்களையும் மனதுருக கூறிமுடித்து, நாமும் மன்னிக்கிறவாகளாக இருக்க வேண்டும் என்றும், அதுவே சந்தோஷமான வாழ்விற்கு வழி என்றும் கூறி முடித்தார். அதைக் கேட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர். அநேகர் அவரை சூழ்ந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அவர் ஒரு மனிதனின் முகத்தைப் பார்த்தார். அந்த முகம் அவருக்குத் தெரிந்த முகமாயிருந்தது. உடனே ஞாபகம் வந்தது. நாசிக் கேம்பில் தானும் தன் சகோதரியும்பட்ட பாடுகளும், தன் சகோதரியை எவ்வித இரக்கமுமின்றி கொடூரமாகக் கொன்ற கொலைப்பாதகன் இவன்தான் என்ற நினைவுகளும் எழுந்தன. இப்படி அவர் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அம்மனிதன், ஷநீங்கள் இன்றுக் கொடுத்த மன்னிப்பின் செய்திக்காக நன்றி. நீங்கள் நாசிக் கேம்பைப் பற்றிச் சொன்னீர்கள். நான் அதில் ஒரு தலைவனாக் இருந்தேன். இப்போதோ நான் ஒரு கிறிஸ்தவன். இயேசுகிறிஸ்து என் பாவங்களை மன்னித்து விட்டார். நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?| என்றுக் கேட்டான்.


அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள். ஆயிரமாயிரமான நினைவுகள் அவர்களது உள்ளத்தில் பளிச்சிட்டது. தன் தகப்பன் மற்றும் தன் சகோதரியின் மரணத்திற்கு காரணமான மனிதன், தான் பட்ட எண்ணற்ற இன்னல்களுக்கு காரணமான மனிதன் தன் முன்னே நிற்கிறான், என்கிற வெறுப்பும் அருவெறுப்பும் அவர் மனதில் தோன்றியது.


சற்று நேரத்திற்கு முன்புதான் மன்னிப்பைக் குறித்துக் பேசினார்கள். இப்போது மன்னிக்க முடியாத நிலை. அமைதியாக தேவனிடம் தனக்கு வேண்டிய சத்துவத்தையும் அந்த மனிதனை மன்னிக்கும் மன வலிமையையும் தாரும் என்று ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அப்படி ஜெபிக்கும்போதே ஆவியானவர் அவர்களில் கிரியை செய்ய அரம்பித்தார். அந்த நாசிக் காவலனின் கரங்களைப்பிடித்து, ஷசகோதரனே உங்களை என் முழு இதயத்தோடும் மன்னிக்கிறேன்| என்று கண்கலங்க கூறினார்க்ள. இந்தச் சம்பவத்தைப் படித்த போது என்கண்கள் கலங்கியது. எப்பேற்ப்பட்ட மனிதனையும் மன்னிக்க தேவன் கிருபை மிகுந்தவராயிருக்கிறார். ஆனால் மனிதர்களாகிய நாம் மன்னிக்க மிகுந்த தயக்கம் காட்டுகிறோம.; கோரியைப் போன்று தன்னை இந்த அளவு பாதித்த மனிதனை மன்னிக்க முடியுமென்றால், நாம் மன்னிக்க எந்த மனிதனுடைய தப்பிதங்களும் தடையாக இருக்க முடியாது.


மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார் - (மத்தேயு 6:15). நாம் மற்றவர்களின் குற்றங்களை மன்னித்தாலே நமது பாவம் மன்னிக்கப்படும். மற்றவர்களின் குற்றங்களை மன்னிப்போம். இயேசுவின் அன்பு நம்மூலம் வெளிப்படட்டும்.


ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, மற்றவர்களை மன்னிப்பதில் நாங்கள் முந்திக் கொள்ள எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை மன்னிக்க உதவி செய்யும். சத்துருக்களை சிநேகிக்கவும், எங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Friday, December 25, 2009

அனுதின மன்னா Dec 26

கலங்கி தவிக்காதே

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். - நீதிமொழிகள். 22:19.

1958ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 10ம் தேதி, சார்ல்ஸ் பிளான்டின் என்பவர், நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு முனை தொடக்கி, மறுமுனை வரைக்கும், 1100 அடி நீளமுள்ள கயிற்றின் மேல் நடக்கப் போவதாக அறிவித்தார். அதைக் காண இரு கரைகளிலும் கூட்டம் அலை மோதியது. அவர் 38 அடி நீளமும், 40 பவுண்ட் எடையுள்ள கோலை பிடித்துக்கொண்டு சமநிலையாக நடந்து, ஒரு முனையிலிருந்து மறுமுனையை வந்தடைந்தார். அதுவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அவர் வந்து சேர்ந்தவுடன் விண் அதிரும் கரகோஷத்தை எழுப்பியது.


அவர் தான் மீண்டும் நடக்கப் போவதாகவும், ஆனால் இந்த முறை ஒரு மனிதனை தன்னுடைய முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்கப் போவதாகவும் அறிவித்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம், நான் என் முதுகில் ஒரு மனிதனை ஏற்றி மறுகரையில்சேர்ப்பேன் என்று நம்புகிறீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு எல்லாரும் ஆம் என்று தலையை ஆட்டினார்கள். அப்படியானால் யாராவது வாருங்கள், நான் போய் சேர்க்கிறேன் என்று அழைத்தார். யாரும் முன்வரவில்லை. ஆகையால் தன் மேனேஜர் ஹென்றியிடம், நீங்கள் நம்புகிறீர்களா? என்றுக் கோட்டார். அதற்கு அவர் ‘ஆம் நிச்சயமாக நம்புகிறேன். நானே உங்கள் பின்னால் அமர்ந்து வருகிறேன்’ என்று கூறி அவர் மேல் அமர்ந்துக் கொண்டார். அவரை சுமந்தவாறு பிளான்டின் நடக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்தக் கயிறு ஆட ஆரம்பித்தது. உடனே பிளான்டின், ஹென்றியுடம், ‘நீர் எதையும் செய்ய வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்தக் கொள்கிறேன்| என்று கூறி எச்சரித்தார். ஹென்றியும், எதுவும் செய்யாமல், பிளான்டினை முற்றிலும் சார்ந்து, இருவரும் பத்திரமாய் மறுகரை வந்து சேர்ந்தனர்.


அநேகர் நான் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லியும் தங்களையும் தங்கள்
பிரச்சனைகளையும் அவர் மேல் வைக்க விசுவாசிப்பதில்லை.


‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்ளூ நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்;அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது' - (மத்தேயு 11:28-30) என் இயேசு அழைக்கிறார். ஆனால் நம் சுமையை அவர் மேல் வைக்க நாம் அவரை விசுவாசிப்பதில்லை. நாமே சுமந்து துயரப்படுகிறோம். நமது துக்கங்களை துன்பங்களை, வியாதிகளை சுமந்த தேவன் நமக்குண்டு அவர் மேல் வைத்து விட்டால் அவர் நம்மை தாங்கி நடத்துவார்.


கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

கலங்கி தவிக்காதே

அவரே உன்னை ஆதரிப்பார்

அதிசயம் செய்வார்.




ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்கள் பாரங்களை நாங்களே சுமந்து தவித்துப் போனோம் ஐயா. உம் மீது நாங்கள் இப்போதே வைக்கிறோம். திரும்ப நாங்கள் அதை எடுத்து சுமக்காதபடி, எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை துக்கங்களை மாற்றும். அதிசயம் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Thursday, December 24, 2009

அனுதின மன்னா Dec 25

அந்நியரை உபசரி

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு (எபிரெயர். 13:2)

ஜெர்மனியில் மிகவும் குளிரான இரவு. கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்ததினால், மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒருச் சிறுவன் பாடும் குரல் கேட்டது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது பாட்டுப்பாடி, அச்சிறுவன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாடுவதைக் கேட்ட அத்தம்பதியினர், அந்த அழகிய குரல், இக்கடும் குளிரில் பாடினால் கெட்டுவிடுமே எனறு எண்ணி, அச்சிறுவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். கந்தைகளையும் அழுக்குத் துணிகளையும் அணிந்து, குளிரில் நடுங்கியபடி இருந்த அவனை அனலான இடத்தில் கொண்டுவந்து, தங்கள் மரித்த மகனின் உடைகளை அணியச் செய்து, சாப்பிட ஆகாரமும் கொடுத்தார்கள்.


சாப்பிடும்போது அச்சிறுவன், தனது தந்தை மிகவும் ஏழ்மையானவரென்றும், தனக்கு உடையோ உணவோ கொடுக்க இயலாதவர் என்றும் கூறினான். இதைக் கேட்ட அத்தம்பதியினரின் இருதயம் நெகிழ்ந்தது. தங்கள் மகனின் படுக்கையில் படுக்க வைத்தனர். அவன் தூங்கிய பிறகு, அவர்கள், தங்களது மரித்த மகனுக்கு பதிலாக அச்சிறுவனை தத்தெடுப்பது என்று முடிவு செய்தனர்.


அடுத்த நாள் காலையில் அச்சிறுவன் எழுந்த போது, தங்கள் முடிவை தெரிவித்த போது, அவன் மிகவும் சந்தோஷப்பட்டு, சம்மதித்து, அவர்களோடேயே தங்கினான். அவனை படிக்க வைத்து, ஒரு பாதிரியும் ஆக்கினார்கள். அநதப் பாதிரி வேறு யாருமில்லை, புரட்சி செய்து புரோட்டஸ்டண்ட் என்னும் பிரிவை உண்டாக்கி, உலகத்தை கலக்கிய மார்ட்டின் லுத்தரே ஆவார்.

பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள,; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்..


மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார் - (மத்தேயு.25:35,40).


நமக்கு செய்ய திராணியிருக்கும்போது செய்யத்தக்கவர்களுக்கு நம்மாலியன்ற உதவிகளை
செய்வோம். அது கர்த்தருடைய பார்வையில் பிரியமாயிருக்கும். பரலோகில் அதற்கு நிச்சயமாக பதில் செய்யப்படும். ஒருவருடைய அத்தியாவசிய தேவையில் நாம் உதவும்போது, அவர்கள் இருதயம் நன்றியுடன் தேவனை துதிக்கும். அப்போது அதன் ஆசீர்வாதம் நமது மேலும், நமது பிள்ளைகளின் மேலும் என்றென்றும் நிற்கும்.


உலகத்தின் வெளிச்சம் நீ

எழுந்து ஒளி வீசு

மலைமேல் உள்ள பட்டணம் நீ

மறைவாக இருக்காதே


ஜெபம்:
எங்கள் அன்பின் பரம பிதாவே, அந்நியரை உபசரிப்பதில் நாங்கள் சோர்ந்து போகாதிருக்கச்
செய்யும். எங்களால் இயன்ற நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்து அதன் ஆசீர்வாதங்களை
பெற்றுக் கொள்ளச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Wednesday, December 23, 2009

அனுதின மன்னா Dec 24

சுவிஷேஷ பாட்டில்கள்

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் - (பிரசங்கி. 11:1)

ஒரு சகோதரன் மிகவும் ஆத்ம பாரம் உடையவராய் எப்படியாவது கர்த்தரின் சுவிசேஷத்தை பரப்ப வேண்டும் என்று அதிக வாஞ்சையுளள்வராய் இருந்தார். அதற்காக தேவனிடம் வழியைக் காட்ட வேண்டும் என்று ஜெபித்து வந்தார். அப்பொழுது கர்த்தர் அவருக்கு வெளிப்படுத்தினது சுவிசேஷ பாட்டில்கள்'. அதன்படி, அவர், தூக்கி எறியப்பட்ட பாட்டில்களை சேகரித்து, அதில் அச்சடிக்கப்பட்ட சுவிசேஷ பிரதிகளை வைத்து, தன் வீட்டின் அருகே உள்ள ஒரு ஆற்றில் மிதக்க விடுவார்.


அவர் தொடர்ந்து, 23 வருடங்களாக, 27,000 சுவிசேஷ பாட்டில்களை அந்த ஆற்றில் மிதக்க விட்டார். சரி, இந்த பாட்டில் ஊழியத்தினால் பலன் என்ன என்று கேட்கிறீர்களா? நம்ப மாட்டீர்கள், அந்த சுவிசேஷ பாட்டில்கள் சென்ற இடங்களிலிருந்து, 5600 மக்கள் அதிலிருந்த பிரதிகள் மூலமாக தொடப்பட்டதாகவும், கர்த்தரை ஏற்றுக் கொண்டதாகவும், அவருக்கு பதில் அனுப்பியிருந்தார்கள். மட்டுமல்ல, பதிமூன்றரை வருடங்களுக்குப்பிறகு, அவருக்கு வந்த கடிதத்தில், ஒரு சமுதாயமே இரட்சிக்கப்பட்டதாகவும் அந்த இடத்தில் ஒரு ஆலயமும் ஏற்படுத்தப்பட்டதாக எழுதப்பட்டிருந்ததைக் கண்டபோது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.


நேற்றைய தினத்தில் பார்த்தோம், திரும்ப வரமுடியாத நரகம் என்று. அதிலிருந்து ஆத்துமாக்களை தப்புவிக்க நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும். அது சுவிசேஷ பாட்டிலாய் இருக்கலாம் அல்லது வேறு எந்த முறையிலாவது இருக்கலாம். ஆத்துமாக்களை இரட்சிக்க தேவனுடைய வார்த்தைகள் இன்னும் வல்லமையுள்ளதாகவே உள்ளது. அதை இரட்சிக்கப்படாத மக்களிடம் சேர்க்க வேண்டியது நமது பொறுப்பு. கர்த்தருடைய தாகத்தை தீர்த்து வைப்போமா?


எனக்காய் பேசிட நாவு வேண்டும்

என்னைப் போல் நடந்திட கால்கள் வேண்டும்

என்னில் அன்பு கூற ஆட்கள் வேண்டும்

அதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்



ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, தடவிப் பார்த்தாவது ஜனம் உம்மைக் கண்டு கொள்ள வேண்டும் என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வாஞ்சையைப் போல எந்த வகையிலாவது ஜனத்தை சந்தியும் அப்பா. அதற்கு எங்களை கருவியாக பயன்படுத்தும். எங்களை எந்த நற்கிரியையும் செய்ய ஆயத்தமுள்ள பாத்திரங்களாக உமக்கே அர்ப்பணிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.





கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Tuesday, December 22, 2009

அனுதின மன்னா Dec 23

திரும்பி வர முடியாது

'நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?'- மத்தேயு 13:33

எங்களுடைய நகரிலே ஒரு பெரிய பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. எனது நண்பர்களுடன் நானும் அங்கு சென்றிருந்தேன். கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளின் மத்தியில் சிறு சிறு கடைகளும் அனைத்து விதமான விளையாட்டுகளும், விதவிதமான திண்பண்டங்களும் பார்ப்பவரின் மனதை கொள்ளை கொள்வதாய் அமைந்திருந்தன.


இதில் ஒரு பிரமாண்டமான, மிகவும் வித்தியாசமான ராட்டினமொன்று (ஏண்ஹய்ற் ரட்ங்ங்ப்) அனைவரது பார்வையையும் தன் வசமாக்கிக் கொண்டிருந்தது. அதன் விசேஷம் என்னவென்றால், ஏறுபவரின் உடம்பு பெல்டினால் இறுக கட்டப்பட்டு ஒரு சிறு அறைக்குள் அமர்ந்து கொண்டவுடன் கதவு மூடப்படுகிறது. பின்பு மேலும் கீழும் சிறிது சிறிதாக ஆட்டி பின் படுவேகமாக அசைக்கப்பட்டு தலைகீழாக ஐந்து நொடிக்கள் நின்று விடுகிறது. இதைக் கண்ட எனது நண்பனுக்கு அதில் ஏறவேண்டுமென்று மிகவும் ஆசை. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று கூறினான். நாங்களும் ஆசையுடனும், பரபரப்புடனும் ஏறி அமர்ந்தோம். ராட்டினம் தன் வேலையை ஆரம்பித்தது. இறுதியில் என் நண்பர் கத்தி கதறி ஆண்டவரே! ஆண்டவரே! என்று கதறி அழுதேவிட்டார். அதிலிருந்து இறங்கிய பின்பும் சிறது நேரத்திற்கு அந்த பயத்திலிருந்து வெளிவர இயலவில்லை.


நண்பர்களே! இது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சிதான். இருப்பினும் ராட்டிணத்திலிருந்து இறங்கிய என் மனத்திற்குள் மனித மூளையினால் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரத்திலே ஒருவித மரண பயம் இருக்குமென்றால் சாத்தானுடைய நரகம் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். அப்பப்பா! எப்பாடு பட்டாவது பரலோகம் சேர்ந்துவிட வேண்டுமென்று என் மனம் வாஞ்சித்தது.


அருமையானவர்களே! ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இப்படிப்பட்ட சிறு சிறு பயங்கள் ஏற்படும்போது நாம் தப்பிக்கலாம். ஆனால் ஒருமுறை நரகத்திற்கு சென்றுவிட்டால் திரும்பி வரவே முடியாதல்லவா!


நரகம் என்பது உண்மை! பரலோகமென்பது நிச்சயம். நமது உலக வாழ்வின் நடத்தை அதில் ஒன்றை நமக்கு தீர்மானிக்கும். வாலிபனே! உனது பாதை நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்குமென்றால், தயவு செய்து யோசித்து உன் பாதையை மாற்றிக் கொள். பக்தன் பாடுகிறார் :


“பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

பெற்றுக் கொள்ள வேண்டும்

பரலோகத்தில் ஓர் இடம்

நீ பெற வேண்டும்”



ஜெபம்: எங்கள் அன்பின் பரலேகப் பிதாவே, உம்மை வாழ்த்துகிறோம், உமது நாமத்தை மகிமைப் படுத்துகிறோம். எங்களை உம்முடைய பாதபடியில் ஒப்புக்கொடுக்கிறோம். இன்று எங்களுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து எங்களை பரிசுத்தமாக்கும். பரலேகத்தின் நிச்சயத்தை தாரும். எங்களுடைய ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்கிறதற்காக நன்றி, எல்லா துதி கனம் மகிமை உமக்கே செலுத்துகிறோம், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

அனுதின மன்னா Dec 22



நான் என்னும் சுயம்

ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். - (கலாத்தியர் 6:3)

ஒரு முறை ஒரு சாது, வேறொரு புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றிருந்தார். அந்த இடத்தில் புகழ் பெற்றிருந்த இன்னொரு சாதுவின் சீடர்களிடம், ‘நான் ஒரு பெரிய சாது, என்னை ஒரு விருந்தினராக அடைவதற்கு உங்கள் சாது கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னை பார்க்க உங்கள் சாதுவை வரச் சொல்லுங்கள்’ என்று கூறினார். அதற்கு மற்ற சாது, ‘நான் மரித்தவுடன் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்’ என்று பதில் கூறி அனுப்பினார். அவர் தான் மரிப்பதைக் குறித்துக் கூறவில்லை. நான் என்கிற ஆணவம் போன பிறகு தன்னை காண வரச் சொன்னார்.



இன்று அநேகருக்கு 'நான்' என்கிற ஆணவமும் அகந்தையும் இருப்பதால், கர்த்தரை தனிப்பட்ட முறையில் அறிய முடியாமலிருக்கிறார்கள். நான் என்பது சிலுவையில் அறையப்பட்டாலொழிய யாரும் கிறிஸ்துவைக் காண முடியாது. அநேகருக்கு தாங்கள் எந்த நிலையிலிருந்து வந்தார்கள் என்பது மறந்து விடும். தற்போது இருக்கிற நிலைமைதான் கண்முன் தெரியும். அதனால் மற்றவர்களை துச்சமாக எண்ணுவதும், தங்களை பெரியவர்களாக எண்ணிக் கொள்வதும் நடைமுறையில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். சமீபத்தில், மிகச் சிறந்த ஒரு ஊழியர் ஒரு மாநாட்டிற்காக வேறொரு நாட்டிற்கு சென்றிருந்தார். அவருக்கு ஒரு ஓட்டலில் ஒரு அறையை ஒதுக்கியிருந்தார்கள். அவர் அந்த அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, வேறொரு ஊழியர், (அவரும் பெரிய ஊழியரே) , அந்த அறைக்கு வந்தார். இவரிடம், எனக்கு இந்த அறை
ஒதுக்கப்பட்டுள்ளது, நீங்கள் எப்படி வந்தீர்கள்? என்று சத்தம் போட்டாராம். மற்றவர் அமைதியாக, ‘நம் இருவருக்கும் ஒரே அறைதான் ஒதுக்கியுள்ளார்கள்’ என்று கூறவும், அவர், ‘அது எப்படி, நான் என்ன? என் நிலைமை என்ன? நான் எப்படி மற்றவர்களோடு இருப்பது’ என்று போன் பண்ணி வேறு அறை மாற்றி வாங்கிப் போனாராம். (இது ஒரு உண்மை சம்பவம்) எவ்வளவு பெரிய ஊழியக்காரராக இருந்தாலும், நான் என்பது போகவில்லை என்றால், என்ன ஊழியம் செய்தும் பிரயோஜனமில்லை.


ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது - (யாக்கோபு. 4:6).


இயேசுகிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் - (பிலிப்பியர் 2:6-8). . இயேசுகிறிஸ்துவே தம்மை மரணபரியந்தம் தாழ்த்தும் போது நாம் எம்மாத்திரம்? ஆகவே நாம் எந்தக் காரியத்திலும் பெருமைக் கொள்ளாதபடி, நான் என்னும் சுயம் சிலுவையில் அறையப்பட்டதாக, தாழ்மையையே எப்போதும் தரித்துக் கொள்வோம். தேவனுடைய கிருபையை சுதந்தரித்துக் கொள்வோம்.


சுயம் என்னில் சாம்பலாய் மாற

சுத்தாவியே அனல் மூட்டும்

ஜெயம் பெற்று மாமிசம் சாக

தேவா அருள் செய்யுமே




ஜெபம்: எங்கள் அன்பின் நல்ல தகப்பனே, 'நான்' என்கிற அகந்தை எங்களுக்கு எப்போதும் வராதபடி எங்களை காத்துக் கொள்ள கிருபை செய்யும். பெருமையுள்ளவர்களுக்கு நீர் எதிர்த்து நிற்பதால் நாங்கள் எங்களை எந்த நிலையிம் தாழ்த்தி ஜீவிக்கவும், உம்முடைய கிருபைகளை பெற்றுக் கொள்ளவும் கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.




கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

சிந்திக்க சில

"இயேசுவினிடம் கேட்டால்தான் கிடைக்கும். புரட்சித்தலைவியிடம் கேட்காமலே கிடைக்கும்"
-முன்னாள் தமிழக அமைச்சர் ஜனார்த்தனன்.

பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன் கடவுளா? உலக பாவங்களுக்காக பலியான கிறிஸ்து கடவுளா?"
-சென்னை மெரினா பீச்சில் அறிஞர் அண்ணா

"புதுவை கிறிஸ்தவர்கள் மாநிலமாக மாறுகிறது. அதை தடுக்க கிளர்ச்சி நடத்துகிறோம்"
-RSS தலைவர் இராமகோபாலன் 13/3/1994 தினகரன்

"இந்து சமுதாயம் பலமுனை தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.நமது நாட்டில் இந்து எழுச்சி ஏற்ப்பட்டுள்ளது.நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும்.இதன் மூலம் இந்தியாவில் இந்து சாம்ராஜ்யம் உருவாகும்"
-தமிழக இந்து முண்ணணி அமைப்பாளர் ராம கோபாலன் 2/11/1995 தினமலர்

"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் 20-11-1993 மாலைமலர் தேன்மலர்

"விலங்குகள் கோவிலுக்குள்ளே செல்லலாம்.மனிதர்கள் மட்டும் கூடாது.அதனால் மனிதர்களை மனிதர்களாக மதிக்கற மதத்துக்கு செல்கிறோம் என்கிறார்கள். அதில் என்ன தவறு? அது அவர்கள் விருப்பம்.யாருக்கு எந்த மதம் விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றலாம். அனைத்துக்கும் அனுமதி கொடுப்பதே மதசார்பற்ற தன்மை. மத சார்புள்ள இஸ்ரேலில் கூட ஜெருசலேம் மசூதியை இடிக்க விடாது ராணுவம் 3 முறை விரட்டியடித்தது"
-வை.கோ 9-1-1994 தினகரன்

நன்றி : www.thewayofsalvation.org

Monday, December 21, 2009

சபரிமலை மகரவிளக்கு செயற்கையே..

தமிழ்முரசு 5/29/2008 மகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்...







Jollee Abraham - Cinema Singer Turn to Christ



JOLLEE ABRAHAM, B.Sc. Botany., Graduate, from Sacred Heart College, Thevara, Cochin. He arrived at Chennai in 1974 for a recording by KALABHAVAN at HMV. It was a Malayalam Christian Devotional Songs recording. Two songs were sung by Padmabhushan K.J.Yesudas and two songs by Jollee Abraham. It was a good entry for him. His very first recording was Christian songs. He later became the Assistant Recording Officer at HMV, The Gramophone company of India Ltd., Chennai. The famous Malayalam Movie Producer/Director/Lyric writer Shree. Shreekumaran Thambi gave him the first break in his film, CHATTAMBI KALYANI where he has given voice for Sri. Prem Nazir, the song titled " JAYIKKANAI JANICHAVAN NAAN", music by Sri.M.K.Arjunan.

He, then got opportunity to sing for other famous Music Directors like Messrs. M.S.VISWANATHAN, G.DEARAJAN, DAKSHINAMOORTHY, SALEEL CHOWDHRY, SHYAM, A.T. UMMER. JOHNSON, RAVINDRAN, KANNOOR RAJAN and also SHANKAR GANESGH. In Tamil, Mellisai Mannar M.S.VISWANATHAN gave him the first opportunity in the film, " VANAKKATHUKURIYA KADHALIYE" - Song - Adiyenai Paramma. In Malayalam he was fortunate enough to sing a few more songs of MSV of which "RAJNIGANDHI" in film, "PANCHAMI" was a Super hit. People still remember his voice through the Tamil song " Meena Reena, Seetha Geetha" for "Oruthalai Ragam". He later sang for Isai Gnani ILAIYARAJA for the film "KATTA PANCHAYATHU"- Song "Oru Chinna Manikkuyilu" and the film, " MAYA BAZAAR 95" -Song Adada Angu Vilaiyadum. Afterwards he had the opportunity to record songs for other music directors like Sri. Rajan Nagendra, Vijaya bhaskar, T.Rajender, T.G.Lingappa, V.Kumar, Gunasingh, Shivaji Raja, S.P.Venkatesh, etc for other languages like Telugu, Kanada & Hindi.

He learnt his basic Carnatic lessons from Sri.Kumbalam Baburaj, later lessons from Sri.Natesa Bhaghavadhar, and advanced lessons from Sri. R.M.Sundaram , one of the deciples of Sri.G.N.Balasubramaniam. During a span of 30 years he was able to sing nearly 600 film songs which include Tamil, Malayalam, Kanada & Telugu and also Hindi.

During the year 1974, he started singing Tamil Christian Devotional songs for Madras Pentecostal Assembly who were the first ones to release Christian songs in audio cassettes. He also sang for all 14 volumes of MPA. Now, he has to his credit, nearly 10,000 Christian devotional songs. He is an A graded artiste of ALL INDIA RADIO and Doordarshan, Chennai.

Along with film songs and Christian devotional songs, he was also singing many other devotional songs. The year 1992 was a turning point in his life when he realised that his religious beliefs did not permit him to use his God given talents to propagate other beliefs. He therefore stop singing other devotional songs.

He started a Digital Recording Studio at Chennai in the year 1991 by name "ROHITH RECORDING STUDIOS" and an Audio Company named " ROHITH RECORDING COMPANY'. Under this banner he has released only Christian Devotional songs in different languages. In Tamil, the company has 35 Audio Cassettes, 12 Compact Discs & 3 Video Compact Discs, in Malayalam 8 Audio Cassettes, 3 Compact Discs, Telugu, Kanada & English Cassettes and Cd's to its credit. Rohith Recording Co., was the first one to release Christian songs Video Album in Tamil called " EKKALAM".

He has travelled all over the world and performed film songs concerts at most of the major cities of the world. In the year 1997, he also took a decision of singing only for the Glory of the God. He performed his first Christian Devotional Concert in 1997 at U.S.A. & Switzerland, later at the Gulf countries, Sri Lanka, etc. He has a Music Troup called "HOSANNA" performing only Christian devotional songs. He also recently received an achievement award for channeling his talents with the right perspective from "The South Zone Christian Leaders' Revelation Conference" Bangalore. And was also awarded as " SANGEETHA KALA PRAPOORNA" by "GURUKUL LUTHERAN THEOLOGICAL COLLEGE & RESEARCH INSTITUTE", Chennai in the year 2002.

Source
http://tamilchristianonline.blogspot.com/2008/01/about-jollee-abraham-cinema-singer-turn.html

சாது சுந்தர் சிங்




சிறு வ‌ய‌தில் வேதாக‌ம‌த்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அள‌வுக்கு கிறிஸ்த்த‌வ‌ ந‌ம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்த‌வ‌ர் சுந்த‌ர் சிங். ஆயினும் திருத்தூத‌ர் ப‌வுலை ச‌ந்தித்த‌து போல‌, இயேசு இர‌ட்ச‌க‌ர் சுந்த‌ர் சிங் அவ‌ர்க‌ளையும் த‌டுத்தாட்க் கொண்டு அவ‌ரை அற்புத‌வித‌மாய் மாற்றினார். இளம் வய‌தில் நேசத் தாயின் மரணம், ஆதரவற்ற வெறுமை உணர்வு ஆகியவற்றால் தற்கொலை செய்யும் எண்ண‌த்தோடு இருந்த‌ சுந்த‌ர் சிங் ம‌ன‌தை மாற்ற த‌ரிச‌ன‌ம் த‌ந்து த‌ம்முடைய‌ ஊழிய‌ராக‌வும் மாற்றினார். சாது சுந்தர் சிங் கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பாகத் தன்னுடையப் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் வெறுக்கப்பட்டார். சாது சுந்தர் சிங்கிடம் அவருடையப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து கிறிஸ்துவை மறுதலித்து விடும்படிக் கூறினர்.ஆனால் அவரோ நான் கிறிஸ்துவைத் தான் பின்பற்றுவேன் என்று உறுதியாகக் கூறினார். ஒரு நாள் சாது சுந்தர் சிங் வெளியேச் சென்று தன்னுடைய நீளமான முடியை வெட்டிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சாது சுந்தர் சிங்கின் தகப்பனார் கோபத்துடன் சுந்தரிடம் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறினார். அன்று இரவு சாது சுந்தர் சிங்கின் உணவில் விஷத்தை கலந்து அவருக்குச் சாப்பிடக் கொடுத்தனர். அவர் இரவு உணவை உண்ட பின்பாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். உணவில் விஷம் கலக்கப்பட்டது தெரியாமல் இவரும் இரயிலில் பயணம் மேற்கொண்டார். இரயிலில் மயங்கி விழுந்த அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் இவர் கடவுளின் அருளால் தான் பிழைத்தார் என்று சாட்சி பகர்ந்தார்.

சாது சுந்த‌ர் சிங் என்ற‌ பெய‌ரில் காவி உடை த‌ரித்து இந்திய‌ கிறிஸ்த‌வ‌ துற‌வியாகி, எங்கும் ந‌ட‌ந்தே சென்று ந‌ற்செய்தி அறிவித்தார். த‌ன் ஊழிய‌த்திற்கு திரும‌ண‌ ப‌ந்த‌ம் ஒரு த‌டையாக‌ இருக்க‌க் கூடாது என்ற‌ நோக்கில் முழுவ‌துமாக‌ இறைப்ப‌ணிக்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்துக் கொண்ட‌ ஊழிய‌ர் இவ‌ர். சிறையில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ போதும், பாதாள‌ கிண‌ற்றில் த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ போதும் கொஞ்ச‌மும் பின்வாங்காம‌ல் ஆப‌த்து நிற‌ந்த‌ திபெத் ம‌லைப் ப‌குதிக‌ளில் கூட‌ ஆண்ட‌வ‌ருடைய‌ ஊழிய‌த்தைச் செய்து வ‌ந்தார்.இந்தியாவிலும், வெளிநாடுக‌ளிலும் அவ‌ர் த‌ன் விசுவாச‌த்தை அறிக்கையிட்டிருக்கிறார்.இருபதாம் நூற்றாண்டின் வ‌ல்ல‌மையான‌ ஒரு தேவ‌ ஊழிய‌ர் இவ‌ர். எந்த‌ ச‌பையினையும் சாராத‌ ஊழிய‌ராயினும், எல்லாச் சபையினரோடும் இணைந்து ஊழியம் செய்தவர் இவர்.பல முறை மரணத்தின் அருகில் சென்ற சாது சுந்தர் சிங்கைக் காப்பாற்றிய தேவன் அவரை இந்திய தேசம் மட்டுமல்லாது சீன மற்றும் இலங்கை தேசத்திலும் அவரை வல்லமையாகப் பயன்படுத்தினார். இந்திய தேசத்து அப்போஸ்தலன் என்று மக்களால் போற்றப்பட்டார். நாமும் கிறிஸ்துவுக்காக நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து வாழும் போது நாம் துன்பத்தில் நடந்தாலும் கர்த்தர் நம்மை உயிர்பித்து வழிநடத்துவார்

நம் சிந்தனைக்கு: நான் என்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலுமாய் அர்ப்பணித்திருக்கிறேனா? என் ஊழிய‌ம் கிறிஸ்துவுக்குள் அனைவ‌ரையும் ஒன்று ப‌டுத்தும் ஊழிய‌மா? பிள‌வு ப‌டுத்தும் ஊழிய‌மா?

ஜெபம்:

தேவனே நான் என்னையே உமக்கு அர்ப்பணிக்கிறேன் என்னுடைய துன்பங்கள் எல்லவற்றிலும் நீரே என்னுடையத் துணையாக இருந்து வழிநடத்தும். உமக்காக செய்யப் படும் ஊழியங்களில் ஒற்றுமை மனப்பான்மையுடன் இன்னும் ஆர்வமாய் பங்கேற்க என்னை நெறிப்படுத்தும். சாது சுந்தர் சிங்கைப் போல என்னையும் வல்லமையாய் பயன்படுத்த உம் கரத்தில் என்னை தாழ்த்தி ஒப்படைகிறேன். ஆமேன்

Jesus raised a former muslim woman from the dead





I SAW JESUS! pakistani muslim Gulshan Esther 's Amazing story



Part I


Part II



Part III



Part IV



Part V



Part VI



Part VII



Part VIII



Part IX



Part X



நடிகை நக்மாவின் சாட்சி



நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். ``தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்'' என்று அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்' இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார்.

பெங்களூரில் உள்ள `வாழும் கலை' என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்து இருக்கிறார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா `பைபிள்' பிரசங்கம் செய்து, கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி பேசி, அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பேசியதாவது:-

``நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்' நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்' என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.

எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்'தான். நான் கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

எனக்கு இனி கர்த்தர்தான் உலகம். அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.''

இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து அவர், `பைபிள்' வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார்.

'ஏசுவின் இரண்டாம் வருகை' நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்" என்றார் நக்மா.





Testimony of Ex porn star Shelley Lubben





ஹேமா ஜானின் சாட்சி





டைட்டஸ் தாயப்பன் சாட்சி (Testimony)

An amazing testimony from Mr.Titus Thayappan

Part I



Part II



Part III



Part IV



Part V



Part VI



Part VII



Part VIII



If you want to read one of his books online, check the following link.

http://www.ipaseattle.org/thayappan.pdf

And you shall know the truth, and the truth shall make you free!

God Bless You

நடிகர் எ.வி.எம்.ராஜனுடைய‌ சாட்சி (Testimony) வீடியோ

நடிகர் எ.வி.எம்.ராஜனுடைய‌ சாட்சி வீடியோ Part I



சாட்சி வீடியோ Part II

Sunday, December 20, 2009

முகமது நபீயின் மனைவிகள்

ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்று குர்-ஆன் சொல்கின்றது. முகமது நபிக்கு மட்டும் அல்லா எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம் என்று அனுமதிக்கின்றார்.ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.
நபிக்கு மட்டும் அல்லாவின் அருள்- எத்தனை வேண்டுமானால் கட்டு

ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.

முகமது திருமணம் செய்த பெண்களை கவனிப்போம்

கத்யா (முதல் மனைவி) ஒரு பணக்கார விதவை. முகமது நபி தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயதான கத்யாவை திருமணம் செய்தார். அவளை திருமணம் செய்தபடியால் முகமது நபி பெரிய பணக்காரர் ஆனார். நான் நினைக்கிறேன் இவர்கள் வீதியில் நடந்து சென்றால் ஜனங்கள் தாயும் மகனும் என்று நினைத்திருப்பார்கள் என்று. கத்யா இறந்த பின்பு முகமது நபி ஏறக்குறைய 11 பெண்களை திருமணம் செய்தான்.

சௌதா பிந்த் சமா

கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் இனுமொரு விதவையை முகமது திருமணம் செய்தான். (இவளுடைய கணவனும் இவளும் எத்தியோப்பியாவிலே குடியிருந்தனர்- இவளுடைய கணவனுடைய மரணத்திற்கு பின்பு இவளை முகமது திருமணம் செய்தான்).

அயிஷா

முகமதுவின் மரணத்திற்கு பின்பு முகமது நபியின் ஸ்தானத்தில் இருந்த அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6 குடும்பம் நடத்தியது அயிஷாவுக்கு 9 வயது இருக்கும் பொழுது. முகமதுவின் வயது அந்த சமயம் 52. ஆதரம்:Sahih Bukhari 5.236 ஹதீஸ் (இது முகமது நபியின் வாழ்க்கை வரலாறையும், போதனைகளையும் கொண்டுள்ளது).

http://answering-islam.org/Index/A/aisha.html
http://answering-islam.org/Hadith/aisha.html
http://answering-islam.org.uk/Silas/childbrides.htm

இப்படியnhரு கேவலம் கெட்ட செயலை செய்கின்ற மனிதனை எப்படித்தான் எங்கள் தமிழ் மக்களும் அறியாமல் ஏற்றுக்கொண்டார்களோ ! இனியாவது தமிழ் முஸ்லிம்களை உண்மையை அறிந்து உண்மையான மார்க்கத்தை ஏற்று கொள்ளுங்கள்.



ஹவ்சா பிந்த் உமர்
இவளுடைய தந்தையின் பெயர் உமர் இபின் அல் கடாப். முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.




சைனாப் பிந்த் குசைமா
இவளுடைய கணவனின் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, இவள் முகமதை திருமணம் செய்ய கேட்டாள். முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் மரித்துப்போனாள்.



உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
போரில் இவளுடைய கணவனும் மரித்த பின்பு இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.

யுவேரியா பிந்த் ஹரித்
முகமது நபி இவளை திருமணம் முடிக்கையில் இவளுக்கு வயது 20, முகமது நபிக்கு 58. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து கொண்டுபோய் திருமணம் செய்தான். திருமணம் செய்த பின்னர் இவளுடைய தந்தையிடம் இருந்து கொள்ளையிட்ட பொருட்களை முகமது திரும்ப கொடுத்து விட்டான்.

முகமது அல்லாவினுடைய தீர்க்கதரிசி ஆயிற்றே ... ஏன் இந்த பெண் ஆசை? பண ஆசை?



உம் ஹபிபா ரம்லா
இவள் 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி. முகமதுடைய வாழ் நாள் முழுக்க இவன் எதிரியாக இருந்தான். உம் ஹபிபா ரம்லாவினுடைய முதல் கணவன் பெயர்: உபய் துல்லா இபின் யாஷ். இவன் சைனாப் பிந்த யாஷ் உடைய சகோதரன். இவர்கள் அபிசினியா(எத்தியோப்பியா)விலே தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர். அங்கே உபய் துல்லா இபின் யாஷ் உண்மையான ஆண்டவர் இயேசு தான் என்பதை அறிந்து ஏற்றுக்கொண்டான். அதனால் உம் ஹபிபா ரம்லா அவனை விவாக இரத்து செய்தாள். அதன் பின்பு முகமது இவளையும் திருமணம் செய்து கொண்டான்.



சபியா பிந்த் ஹீயாய்
இவளுக்கு வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். பின்பு முகமது இவளை சிறை செய்து, திருமணமும் செய்து கொண்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதiவாயாகவே தன்னுடைய எஞ்சிய காலத்தை கழித்தாள். தன்னுடைய 60 ஆவது வயதில் இவள் மரித்தாள்.



மைமுனா பிந்த் அல் ஹரித்

முகதினுடைய 60 ஆவது வயதில் 36 வயதான முகமது திருமணம் செய்து கொண்டான்.



மரியா அல் கிபித்தியா
எகிப்திய மன்னனுடைய அடிமையான இவள், எகிப்திய மன்னனுக்கு ஒரு குழந்தையைப்பெற்றாள். குழந்தை பெயர் இப்ராஹிம். குழந்தை சிறுவயதிலே மரித்துவிட்டது. இவள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் முகமதுவை திருமணம் செய்தாள். இவளை எல்லாரும் மனைவிபோல பாவித்தார்கள்.

மனதை தொட்டு சொல்லுங்கள்.. ! உண்மையிலே முகமது கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருக்க முடியுமா என்று ? 52 வயதுக்கிழவன் 9 வயது சிறுமியுடன் உடலுறவு கொள்வதென்றால்.... காறித்துப்பவேண்டும் போல உங்களுக்கு மனம் வரவில்லையா?

நான் சொல்வது பொய்யென்று நினைத்தீர்களானால் ஸாஹிஹ் அல்புகாரியை (ஹதிஸ்) நீங்களே வாசித்துப்பாருங்கள்.
http://www.witness-pioneer.org/vil/hadeeth/bukhari/062.htm
http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/bukhari/062.sbt.html

அல்லா- குர்-ஆன்.... என்கின்ற போர்வையில் முகமது கொலையும், கொள்ளையும், அநேகம் பெண்களுடன் உடலுறவும் கொண்டதுதான் மிச்சம். ஒவ்வொரு பெண்களுடைய வயதையும் கவனியுங்கள், குழந்தையிலிருந்து கிழவிகள் வரை.

இது அநியாயமாக்தெரியவில்லையா ?

கடவுள் ஆதாமுக்கு ஏன் ஆயிரத்தெட்டு மனைவிகளை படைக்கவில்லை?

ஆதாமுக்கு கடவுள் ஒரு மனைவியைத்தான் படைத்தார்.

இப்படி மிருக குணமுள்ள முகமதுவை எப்படி தீர்க்கதரிசி என்று ஏற்கமுடியும்? இவனை மனிதன் என்று சொல்வதற்கே வெட்கப்படவேண்டும்.

இவனை எப்படி இயேசுவுடன் ஒப்பிட முடியும்.

வேதம் சொல்லுகிறது, இயேசுவானவரிடத்தில் பாவமே இல்லையென்று.

நன்றி : http://www.tamilchrist.ch

பெண்கள் பற்றி பரிசுத்த வேதாகமம் மற்றும் குர்‍ஆன் என்ன சொல்கிறது ??

பெண்கள் வேதாகமம், குர்-ஆன் ஒப்பீடு

உலகத்தில் எந்த நாட்டில் பார்த்தாலும் பெண்கள் கலாச்சார ரீதியில் மிகவும் தாழ்வான நிலையிலே வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்றால் இஸ்லாமிய பெண்கள். அதுவும் ஆபிரிக்க தேசத்திலே சொல்லிமுடியாத இன்னல்களை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு சொல்லித்தருகின்றது. அதனால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெண்களை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர்..

வேதாகமத்திற்கும் குர்-ஆனிற்கும் உள்ள வித்தியாசங்களை கவனியுங்கள்.

குர்-ஆன்:

ஒரு மனிதன் நான்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கின்றது.

ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

வேதாகமம்:

மத்தேயு 19: 4- 6 அதிகாரங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கின்றார்:
ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்;அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?


1.கொரிந்தியர் 7: 2 வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் சொல்கின்றார்:

அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். வேதாகமம் ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றது.

குர்-ஆன்:

முஹமது நபிக்கு நான்கு பெண்கள் போதவில்லை, அதனால் அவர் விரும்பிய அளவிற்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அல்லாவிடம் அனுமதி பெறுகின்றார்.

அந்த வசனம்: ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். முஹமது நபிக்கு 11 மனைவிகள் இருந்தார்கள்

குர்-ஆன்:


பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு அனுமதி கொடுக்கின்றது.


ஸீரா 4: 34 எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள் அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

வேதாகமம்:

எபேசியர் 5: 23 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

கொலோசேயர் 3: 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.

குர்-ஆன்:

சொத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பதில் அரைவாசி

ஸீரா 4: 11 உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்.

வேதாகமம்:

கலாத்தியர் 3: 28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்


குர்-ஆன்:

சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்


ஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்

வேதாகமம்:

சுவிசேஷ புஸ்தகங்களில் கிருபை பெற்ற முதலாவது நபர் ஒரு பெண். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு முதலில் ஒரு பெண்ணுக்குத்தான் காட்சியளித்தார். ஆண்டவராகிய இயேசு ஆண்களையும், பெண்களையும் ஒரே மாதிரியே நேசித்தார்.

லூக்கா 1: 30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். யோவான் 20: 14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்,

ஸஹீஹ_ல் புகாரி:

(முகமது நபியின் உரைகள் அடங்கிய புஸ்தகம், குர்-ஆனுக்கு எவ்வளவு மதிப்பு இஸ்லாமியர்கள் கொடுக்கின்றார்களோ, அந்தளவு மதிப்பு இதற்கும் கொடுக்கின்றார்கள்)
Volume 1, Book 2, Number 28: சொல்கின்றது,

முகமது நபிக்கு அல்லா நரகத்தை காட்டுகையில் அங்கே அதிக சதவிகித மக்கள் பெண்களே என்று.



வேதாகமம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கின்றது. தேவன் அன்பே உருவானவர், அவரிடத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. அவர் ஆண்களை எப்படி நேசிக்கின்றாரோ, அப்படியே பெண்களையும் நேசிக்கின்றார். வேதாகமத்தினுடைய பார்வையில் இயேசுவை யார் யார் ஏற்று கொண்டார்களோ, அத்தனை பேரும் கடவுளுடைய பிள்ளைகள்.


நன்றி : http://www.tamilchrist.ch

இஸ்லாம் ஓரு இனிய மார்க்கமா ???

இஸ்லாம் மதத்தை உருவாக்கிய முகமது நபி கி.பி சித்திரை மாதம், 20ம் திகதி, 571ம் ஆண்டு மெக்காவிலே (தற்காலத்து சவுதி அரேபியா) பிறந்தான். சிறுவயதிலே தாயையும், தந்தையையும் இழந்த முகமதுவுக்கு, அவனுடைய சிறியதகப்பன் புகலிடம் கொடுத்தார். முஹமது ஒரு வர்த்தக வியாபாரியாக தொழில் செய்து வந்தான்.

பின்பு முஹமது தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயது கதியா எனும் பணக்கார விதவையை திருமணம் செய்தான். அதனால் மிகவும் பணக்காரன் ஆனான்.

முகமதுவிற்கு 40 வயதாக இருக்கையில்: ஒருநாள் தன்னுடைய மனைவியாகிய கதியாவிற்கு சொன்னான்:

ஹிரா எனும் குகையில் அல்லாவுடைய தூதன் காபிரியேலை சந்தித்ததாகவும், தன்னை ஓதுவீராக என்று சொன்னதாகவும், தான் அதற்கு எனக்கு ஓத தெரியாது என்று தான் சொன்னதாகவும், மூன்றாம் முறை ''படைத்த உம் இறைவனின் திருப் பெயர் கொண்டு ஓதுவீராக! கரு வறைச் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நிலையிலிருந்து அவன் மனிதனைப் படைத் தான். ஓது வீராக! உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில் அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுத்தான்""(96:1-5) எனக் கூறியாதாகவும், பின்னர் காபிரியேல் தூதன் திரும்பி சென்று விட்டதாகவும்.
பின்பு 22 வருடங்களாக முகமது நபியின் மரணம் வரை காபிரியேல் முகமதுவுடன் பேசியவைகள் எனப்படுபவைகளே குர்-ஆனில் அடங்கியுள்ளது.


கதியா தான் முகதுவினால் முதலாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டவள். அதன் பின்பு முகமது ஜனங்களுக்கு அல்லாவைப்பற்றி கூறத்தொடங்கினான். ஆரம்பத்தில் முகமதுவை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக மெக்காவிலே முகமதுவிற்கு எதிர்ப்பு வந்தது. அதனால் மெதினாவுக்கு முகமதுவும், முகமதுவின் ஆட்களும் தப்பியோடினார்கள். மெதினாவிலே முகமதுவினுடைய போதனைக்கு வரவேற்பு இருந்தது. 8 வருடங்களுக்கு பின்பு முகமது மெக்கவை கைப்பற்றினான். இப்போது மெக்கா ஒரு புனித நகரமாக விளங்குகின்றது

முகமதுவையும், குர்-ஆனையும் அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் ஏற்றுக்கொள்ளவவில்லை. இன்றும், என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிறிஸ்துவுக்கு பின்

571: முகமது பிறப்பு
623: முகமது மெதீனாவுக்கு செல்லுதல்
631: முகமதுவினால் மெக்கா கைப்பற்றப்பட்டது
633: முகமதுவின் மரணம்

குர்-ஆன்- அறிமுகம்

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆன் எழுதப்படவில்லை. முகமதுவுக்கு எழுதப்படிக்கவும் தெரியாது. முகமதுவினுடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய போதனைகளை குறித்து பல வித்தியாசமான கருத்துக்கள் இருந்தது. முகமதுவின் வார்த்தைகள் அழிந்து விடுமோ, மாற்றப்பட்டுவடுமோ என்று கருதினர்.

கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து அலி என்ற கலிபா குர்-ஆன் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். அலியின் மரணத்தின் பின்பு கலிபா உத்மான் அரேபியாவை ஆணடார்.

குவைது என்ற போர்வீரன் உத்மானிடம் குர்-ஆன் வாக்கியங்களை குறித்து பேசினான். அதன் பின்பு அவர் 14 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, குர்-ஆன் வாக்கியங்களை சேகரிக்க முயன்றார். முகமது வாய் வழியாக சொன்னவற்றை கேட்ட அநேகர் வந்து முகமது இதையெல்லாம் என்று சொன்னார்கள். அதிகளவு ஜனங்கள் வந்ததனால், இனி யாரும் குர்-ஆன் வாக்கியங்களை கொண்டுவர வேண்டாம் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதுவரை சேகரித்த வாக்கியங்களை எல்லாம் தொகுத்து அமைத்தனர். இந்த நிகழ்ச்சி கி.பி 650- 656 வரையில் நடந்தது. குர்-ஆனின் தொகுப்பில் எவை சேர்க்கப்பட வேண்டும், எவை சேர்க்கப்பட கூடாது என்று உத்மான் கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வமான குர்-ஆன் ஒன்று தான் இருக்க வேண்டுமென்று இப்படி செய்யப்பட்டது.

தன் காலத்தில் கொடுக்கப்பட்ட குர்-ஆனின் பிரதியை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, அல்லது அப்படி கருதப்படுகின்ற எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், அல்லது துண்டுப்பகுதிகளாக இருப்பினும் அவற்றையும் எரித்து விட வேண்டுமென்று உத்மான் கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6: 479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது.

ஹதீஸ்- அறிமுகம்

இஸ்லாமியர்கள் குர்-ஆனிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவம் ஹதீஸ் கலைக்கும் கொடுக்கின்றார்கள். ஹதீஸ்- இல் முகமது நபியினுடைய உரைகள், செயல்கள் (வாழ்க்கை), அவர் அனுமதித்த காரியங்கள் ஆகியவைகள் அடங்கியுள்ளது.
உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் நபிமொழிகள்:

ஸஹீஹ் அல்புகாரி (100 சத விகிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நடைமுறையில் இருப்பதும்)

ஸஹீஹ் முஸ்லிம்

சுனன் இப்னுமாஜா

சுனன் அபுதாவூது

ஜாமி உத் திர்மிதீ

சுனன் நஸாஜி



இவற்றில் குர்ஆனுக்கு அடுத்து ஆதாரப்பூர்வமானது என அனைத்துத் தரப்பினராலும் அ';கீகரிக்கப்பட்டுள்ளது ஸஹீஹ் அல்புகாரி ஆகும். புகாரா என்னும் ஊரில் பிறந்த இமாம் முஞம்மது பின் இஸ்மாயீல் என்பவரால் வகுக்கப்பட்டது தான்: ஸஹீஹ் அல்புகாரி எனும் நபி மொழி தொகுப்பு ஆகும்

நன்றி : http://www.tamilchrist.ch

அனுதின மன்னா Dec 21

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டம்

அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக்;கோபு 1:14-15)

நாம் அனைவரும் சோதனைகளிலும், இச்சைகளிலும் அடிக்கடி போராடுகிறவர்களாகவே காணப்படுகிறோம். ஒருவரும் சொல்ல முடியாது, எனக்கு இச்சையே இல்லை அல்லது சோதனையே இல்லை என்று. தனக்கு ஏற்படும் சோதனையில் யார் வென்று, முதிர்ச்சி அடைகிறார்களோ, அவர்கள் அந்த சோதனைக்கு தாங்களே காரணம் என்பதை உணர்ந்து கொள்வார்கள். யார் அடிக்கடி விழுந்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள்தான் மற்றவர்களையும், சூழ்நிலைகளையும், பிசாசையும் குறைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.


பெர்சிய ராஜ்யத்தின் அரண்மனையில், ஒரு இளம் வாலிபன் சோதனையில் அடிக்கடி விழுபவனாக காணப்பட்டான். அவன் இந்தமாதிரி சோதனைகளிலிருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான். இதை அறிந்த அரசன் அந்த வாலிபனிடம், ஒரு பாத்திரத்தில் நிரம்பி வழியும்படி எண்ணெய் ஊற்றி, அதை அவன் தலையின்மேல் வைத்து, இதில் ஒரு சொட்டு கீழே விழுந்தாலும், உன் தலை சீவப்படும். இதை நகரத்தின் ஒரு முனையிலிந்து மறுமுனைக்கு கொண்டு சென்று வர வேண்டும் என்று கட்டளையிட்டான். அவன் அந்த எண்ணெய் பாத்திரத்தை தலையில் வைத்துக் கொண்டு, மார்க்கெட் பகுதியிலும், சந்தடி நிறைந்த தெருக்களின் வழிகளிலும் சுமந்துச் சென்று, ஒரு துளி எண்ணெய் கீழே விழாமல் பத்திரமாய் அரண்மனைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.


ராஜா அவனை நோக்கி, நீ போன வழியில் இருந்த ஹோட்டலின் முன் நின்ற அழகிய பெண்களை பார்த்தாயா? என்றுக் கேட்டான் அதற்கு அந்த வாலிபன் இல்லை நான் பார்க்கவில்லை’ என்றான். ராஜா திரும்பவும், ‘பக்கத்தில் பணத்தை வைத்து எண்ணிக் கொண்டிருந்தார்களே அதைப் பார்த்தாயா’ என்று கேட்க, அதற்கும் ‘இல்லை’ என்று வாலிபன் பதிலளித்தான். அரசன் மீண்டும் அவனிடம், ‘பக்கத்தில் சிலர் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்களே அதைப்பாத்தாயா’ என்று வினவ, அதற்கு அந்த வாலிபன், “இல்லை அரசே, நான் என் தலையில் உள்ள எண்ணெய் பாத்திரத்தின் மேலேயே என் கவனத்தை வைத்திருந்தேன். ஆதனால் என்னைக் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை என்றான். அதற்கு அரசன், ‘சரிதான் ஏன் என்றால் நீ உன் உயிருக்கு கவலைப்பட்டபடியால் மற்ற எந்தக் காரியமும் உன்னை பாதிக்கவில்லை ஆகவே இதன் மூலம் பாடத்தை கற்றுக் கொள் உன் உயிரின் மேல் கவனமாயிருந்தால் நீ எந்த இச்சைகளிலும் விழமாட்டாய்” என்று அறிவுரை கூறினான். பரம அழைப்பின் பந்தய பொருளின் மேல் நம் கவனம் முழுவதும் இருந்தால் நமக்கு இடையிடையே வரும் சோதனைகளிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் தப்பலாம்.
..

“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரேயர் 12:1)


கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்
.

ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, பாவத்திலும் இச்சைகளிலும் நாங்கள் தொடர்ந்து விழுந்துக்
கொண்டிருக்காமல் அவற்றின் மேல் நாங்கள் ஜெயம் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் வெற்றியோடு ஓடி முடிக்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

யார் தேவனுடைய ஜனம் ???

தேவனுககு சாட்சியாக,தன்னுடைய உயிரை கொடுக்கும் கூட்டமா ??

இல்லை தன்னுடைய மத கோட்பாடுகளுக்காக மற்றவர் உயிரை பறிக்கும் கூட்டமா ???

சிந்திப்பீர் என் சகோதரரே !!!

சில வீடீயோக்கள் உங்க்கள் பார்வைக்கு





அனுதின மன்னா Dec 20

மந்தையில் சேரா ஆடுகள்.


எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது
மறைபொருளாயிருக்கும். - (2 கொரிந்தியர் 4:3)

..

ஒரு தாய் தனது ஐந்து வயது மகனைக் கூட்டிக் கொண்டு, தனது கிராமத்தில் நடந்த ஒரு
கண்காட்சியைக் காணச் சென்றிருந்தாள். அந்தச் சிறுவன், அங்கு காணப்பட்ட பலூன்கள், கலர் கலர் ரிப்பன்கள், விளையாட்டுச் சாமான்கள், விதவிதமான விளையாட்டுகள் இவை யாவையும் கண்டு பிரமித்து நின்றான். அவ்வப்போது, ஒரு நிமிடம் தன் தாயின் கரத்தை விட்டு;விட்டு, திரும்ப வந்து கெட்டியாக பிடித்துக் கொள்வான.
.

எப்படியோ அந்தத்தாய், எதையோ வாங்கும்போது, அவனது கரத்தை தவற விட்டாள். அந்தச் சிறுவனும் கூட்டத்தோடு கூட்டமாக காணாமற்போய் விட்டான். அந்தத்தாய் மிகவும் கலங்கி, எல்லா இடத்திலும் தேடினாள். ஒலிபெருக்கியின் மூலம் அறிவிக்கப்பட்டு, கடைசியில் ஒருவர் அந்தச் சிறுவனைக் கண்டு தாயிடம் ஒப்படைத்தார். தன் தாயைக் கண்டவுடன், அச்சிறுவன் “ஏம்மா திடீரென்று காணாமற் போய் விட்டாய்" என்றுக் கேட்டானே பார்க்க வேண்டும்! அவனுக்குத் தெரியவில்லை தான்தான் தொலைந்து விட்டோம் என்று!

.
இப்படித்தான் அநேகர் காணாமற்போன ஆட்டைப் போல வழி தவறி போனதையும் கிறிஸ்துவே வழி என்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் செல்லும் வழியே சரியென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடன் வேலைப் பார்க்கும் ஒரு சகோதரி, ‘எனக்கு வேதத்தைக் குறித்து நம்பிக்கையில்லை. என்னுடைய கத்தோலிக்க குருமார்கள் சொல்லித்தரும் காரியங்களே எனக்குப் போதும் என்று என்னிடம் மிகவும் உறுதியாக கூறினார்கள். இது எல்லா கத்தோலிக்கருடைய கருத்தும் அல்ல. தேவன் இந்நாட்களில் கத்தோலிக்கரின் நடுவில் பெரிய எழுப்புதலை அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கே ஸ்தோத்திரம் உண்டாகட்டும்! இப்படி வேதமே வேண்டாம், வெளிச்சமாகிய கிறிஸ்துவே வேண்டாம் என்று கூறும் ஆயிரமாயிரமான ஆத்துமாக்கள் உண்டு. இவர்கள் கிறிஸ்துவாகிய வெளிச்சத்தைக் கண்டுக் கொள்ள நாம் என்னச் செய்யப் போகிறோம்? இவர்களுடைய இரட்சிப்பிற்காக முழங்கால் யுத்தம் செய்வோம்!

.
மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி கோடி உண்டே சிந்தையில் ஆத்ம பாரம் கொண்டே தேடுவோம் வாரீர் திருச்சபையே!



ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்தக் கடைசி நாட்களில் மந்தையில் சேரா கோடி கோடி ஆத்துமாக்களுக்காக நாங்கள் முழங்காலில் நின்று ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். அழிந்துப் போகிற ஆத்துமாக்களுக்காக திறப்பின் வாசலிலே நின்று ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


.
கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

Saturday, December 19, 2009

த டாவின்ச்சி கோட்

2003ம் ஆண்டு கதாசிரியர் டன் பிரவுன் எழுதிய புத்தகம் தான் "த டா வின்சி கோட்". இதுவரைக்கும் 40 மில்லியன் பிரதிகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. அப்படி இந்த புத்தகத்தில் என்னதான் உள்ளது? டா வின்சி கோட் புத்தகம் அநேகரை கிறிஸ்தவத்தை பற்றி வித்தியாசமாக தவறாக சிந்திக்க வைக்கின்றது. அதனால் தான் இந்தளவு வரவேற்பா ?

புத்தகத்தில் அடங்கியுள்ள சில விஷ‌யங்கள்

இயேசுவும் மகதலேனா மரியாளும் கணவன் மனைவி, அவர்களுக்கு குழந்தை இருந்தது. இயேசுவின் வம்சாவழியினர் இப்போதும் பிரான்ஸ்-இல் வாழ்கின்றனர். இப்படி ...பல

டன் பிரவுன் டா வின் சி கோட் புத்தகத்தை எழுதுவதற்கு உதவிய பல புத்தகங்களில் சில:
The Holy Blood and the Holy Grail (1982), The Messianic legacy (1983), The Templer Revalation (1997), Goddes in the Gospel ( 1988) , Mary Magdalane and the Holy Grail, Beyond god the Father (1973),The Methaethics of Radical Feminism (1978).

டா வின்சி கோட்: லியானார்டோ டா வின்சி வரைந்த இராப்போஜன படத்தில் இயேசுவிற்கு அருகே இருப்பது யோவான் இல்லை, மகதலேனா மரியாள் என்று.

பதில்:லியானார்டோ டா வின்சி வாழ்ந்த காலம்; கி.பி 1452 - 1519. லியானார்டோ டா வின்சிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெரியாது. கிறிஸ்துவின் சீஷர்கள் எப்படி இருந்தார்கள், அவர்கள் எப்படிபட்ட உடை உடுத்திருந்தார்கள் என்றும் தெரியாது. யோவான் வயதிலே மிகவும் இளமையாக இருந்தபடியால் டாவின்சி யோவானை வரையும்போது "தாடி, மீசை" இல்லாமல் வரைந்தார். லியானார்டோ டாவின்சியின் வழக்கம் அது, இளமையானவர்கள் என்று அடையாளம் காட்டுவதற்காக மீசை, தாடி இல்லாமல் நீண்ட தலைமுடியுடன,; மென்மையான முகமாக வரைவது ...

யோவானை மட்டுமல்ல, யோவன் ஸ்நானகனை கூட டாவின்சி மீசை, தாடி இல்லாமல் நீண்ட முடியுடன் தான் வரைந்திருக்கின்றார். ஆதாரம் இந்த படங்களை பாருங்கள்.


இராப்போஜனம்(படம்)


யோவான்(படம்)


யோவான் ஸ்நானகம்(படம்)


அந்த படத்தில் இருப்பது மகதலேனா மரியாளகவே இருக்கட்டும், அப்படி என்றால் அந்தப்படத்தில் யோவான் எங்கே? மற்ற சீஷர்கள் இருக்கும் போது யோவான் எங்கே போய்விட்டார்?




டா வின்சி கோட்: இந்த பாறையின் மேல் என் வீட்டை கட்டுவேன் என்று இயேசு கிறிஸ்து பேதுருவை குறித்து அல்ல மகதலேனா மரியாளை குறித்தே சொன்னார்: (p. 248) இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் எதிர்காலம் மகதலேனா மரியாளின் கைகளில் தான் இருக்கின்றது என்று எண்ணினார்.(p. 248)

பதில்: இயேசு கிறிஸ்து பேதுருவுக்கு அந்த வசனத்தை சொல்லும் பொழுது " இந்த பாறை " என்று சொன்னார்.. அது பேதுருவை குறித்து அல்ல, மாறாக தம்மைக்குறித்தே அப்படி சொன்னார். (மத்தேயு 16: 18) அவரே சபைக்கு மூலைக்கல்லாக இருக்கின்றார். (எபேசியர் 2: 20) பேதுருவோ, மகதலேனா மரியாளோ அல்ல. 1பேதுரு 2: 7ல் பேதுருவே அதற்கு சாட்சி கொடுக்கின்றார்.



டா வின்சி கோட்: 80 க்கும் மேற்பட்ட சுவிசேஷங்கள் இருந்தன, இப்போது நான்கு சுவிசேஷங்கள் மட்டும் தான் இருக்கின்றது. (மத்மேயு மாற்கு, லூக்கா, யோவான்)

பதில்: உண்மையில் இது ஒரு மடமைத்தனமான கருத்து, கனோனால் தெரிவு செய்யப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) தவிர்த்து, இன்னும் வேறு 12 சுவிசேஷங்கள் தான் அந்த நேரத்தில் உலாவி வந்தது. ஆனால் அவைகள் சரியாக தெய்வீக வழிகாட்டுதலை அறிவிக்கவில்லை. அவைகளுடன் Gnostic சுவிசேஷமும் பிற்காலங்களில் வந்தது. ஆனால் அவைகள் எழுதப்பட்ட காலங்கள் மிகவும் பிந்தியதால் அவைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆதி சபை காலத்தில் கிறிஸ்தவர்களின் மத்திய இடங்களாக எருசலேம், கொரிந்து, அலெக்ஸாந்திரியா மற்றும் ரோமாபுரி காணப்பட்டது. இங்கே அவர்கள் இந்த நான்கு சுவிNசுஷத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.

கி.பி 95- 170க்கும் முன்பு வாழ்ந்த கிறிஸ்தவ தலைவர்கள் இந்த நான்கு சுவிNசுஷங்களையும் தான் பாவித்து வந்தார்கள்.



க்ளெமென்ட்(Clement): ரோமாபுரியிலிருந்த சபையில் கி.பி 95 அளவில் மூப்பராக இருந்தவர், இவர் கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நிருபங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதினார்.



பப்பியாஸ்(Papias): இவர் ஒரு பிஷப். இவர் எழுதிய புத்தகம் நுஒpழளவைழைn ழக ழுசயஉடநள ழக வாந டுழசன . இவர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார்.



ஜஸ்ரின் மார்டிர் (Justin Martyr): இவர் கி.பி 140 வேதாகமத்தில் 4 சுவிசேஷங்களைப்பற்றியும் எழுதினார்.



பொலிகார்ப் (Polycarp): இவர் அப்போஸ்தலர் யோவானின் சீஷன். கி.பி 150ல் வாழ்ந்தவர். இவர் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்களை இயேசுவின் வசனங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்.



இரேனியுஸ் (Ireneus): இவர் பொலிகார்ப்பின் சீடர். கி.பி 170ல் இவர் மேற்கோள் காட்டி புதியேற்பாட்டின் 23 புத்தகங்களை எழுதினார். இவர் தவறவிடப்பட்ட புத்தகங்கள் பிலேமோன், யாக்கோபு, 2 பேதுரு, 3 யோவான்.



பப்பிரஸ் 45: கி.பி 200ஐ சார்ந்தது. 4 சுவிசேஷங்களையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

The Muratorian Fragment: கி.பி 175ஐ சார்ந்தது. இதிலும் 23 சுவிசேஷங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.



டா வின்சி கோட்: சவக்கடல் சுருள்கள் 1950ல் கண்டுபிடிக்கப்பட்டது.
பதில்:சவக்கடல் சுருள்கள் 1947ம் ஆண்டுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிற்பாடு ஆய்வாளர்கள் தொடர்ந்து அங்கே அகழ்வாராய்ச்சி செய்தார்கள்.


டா வினசி கோட்: கி.பி 1099ல் பிரான்ஸ் அரசன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இரகசிய சங்கமான "Priory of Sion". அங்கே இயேசுவின் வம்சம் பற்றிய தகவல்களையும், மகதலேனாவைப்பற்றிய தகவல்களையும் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டது.
பதில்:கி.பி 1956ம் ஆண்டு தான் "Priory of Sion" பிரான்ஸ் நாட்டை சார்ந்த Pierre Plantatard என்பரவால் சவிஸில் உள்ள ஜெனிவாவுக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டது. சியோன் என்பது ஜெனிவாவில் உள்ள சிறு மலை. எருசலேமில் உள்ள சீயோனை குறிக்கவில்லை.



டாவின்சி கோட்: சாலமோன் தேவாலயத்தில் கட்டப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வந்து இறங்கிய ஷெக்கினா என்பது யெகோவா தேவனுக்கு இணையான ஒரு பெண் சக்தி.
பதில்: இது உண்மையில் மடமைத்தனம், ஷெக்கினா என்பது யெகோவா தேவனுடைய மகிமை. வேதம் சொல்கின்றது, ஒரே ஒரு கடவுள் தான். வேறு கடவுள்கள் இல்லை என்று.


நன்றி
: http://www.tamilchrist.ch