Saturday, December 19, 2009

த டாவின்ச்சி கோட்

2003ம் ஆண்டு கதாசிரியர் டன் பிரவுன் எழுதிய புத்தகம் தான் "த டா வின்சி கோட்". இதுவரைக்கும் 40 மில்லியன் பிரதிகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. அப்படி இந்த புத்தகத்தில் என்னதான் உள்ளது? டா வின்சி கோட் புத்தகம் அநேகரை கிறிஸ்தவத்தை பற்றி வித்தியாசமாக தவறாக சிந்திக்க வைக்கின்றது. அதனால் தான் இந்தளவு வரவேற்பா ?

புத்தகத்தில் அடங்கியுள்ள சில விஷ‌யங்கள்

இயேசுவும் மகதலேனா மரியாளும் கணவன் மனைவி, அவர்களுக்கு குழந்தை இருந்தது. இயேசுவின் வம்சாவழியினர் இப்போதும் பிரான்ஸ்-இல் வாழ்கின்றனர். இப்படி ...பல

டன் பிரவுன் டா வின் சி கோட் புத்தகத்தை எழுதுவதற்கு உதவிய பல புத்தகங்களில் சில:
The Holy Blood and the Holy Grail (1982), The Messianic legacy (1983), The Templer Revalation (1997), Goddes in the Gospel ( 1988) , Mary Magdalane and the Holy Grail, Beyond god the Father (1973),The Methaethics of Radical Feminism (1978).

டா வின்சி கோட்: லியானார்டோ டா வின்சி வரைந்த இராப்போஜன படத்தில் இயேசுவிற்கு அருகே இருப்பது யோவான் இல்லை, மகதலேனா மரியாள் என்று.

பதில்:லியானார்டோ டா வின்சி வாழ்ந்த காலம்; கி.பி 1452 - 1519. லியானார்டோ டா வின்சிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தெரியாது. கிறிஸ்துவின் சீஷர்கள் எப்படி இருந்தார்கள், அவர்கள் எப்படிபட்ட உடை உடுத்திருந்தார்கள் என்றும் தெரியாது. யோவான் வயதிலே மிகவும் இளமையாக இருந்தபடியால் டாவின்சி யோவானை வரையும்போது "தாடி, மீசை" இல்லாமல் வரைந்தார். லியானார்டோ டாவின்சியின் வழக்கம் அது, இளமையானவர்கள் என்று அடையாளம் காட்டுவதற்காக மீசை, தாடி இல்லாமல் நீண்ட தலைமுடியுடன,; மென்மையான முகமாக வரைவது ...

யோவானை மட்டுமல்ல, யோவன் ஸ்நானகனை கூட டாவின்சி மீசை, தாடி இல்லாமல் நீண்ட முடியுடன் தான் வரைந்திருக்கின்றார். ஆதாரம் இந்த படங்களை பாருங்கள்.


இராப்போஜனம்(படம்)


யோவான்(படம்)


யோவான் ஸ்நானகம்(படம்)


அந்த படத்தில் இருப்பது மகதலேனா மரியாளகவே இருக்கட்டும், அப்படி என்றால் அந்தப்படத்தில் யோவான் எங்கே? மற்ற சீஷர்கள் இருக்கும் போது யோவான் எங்கே போய்விட்டார்?




டா வின்சி கோட்: இந்த பாறையின் மேல் என் வீட்டை கட்டுவேன் என்று இயேசு கிறிஸ்து பேதுருவை குறித்து அல்ல மகதலேனா மரியாளை குறித்தே சொன்னார்: (p. 248) இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் எதிர்காலம் மகதலேனா மரியாளின் கைகளில் தான் இருக்கின்றது என்று எண்ணினார்.(p. 248)

பதில்: இயேசு கிறிஸ்து பேதுருவுக்கு அந்த வசனத்தை சொல்லும் பொழுது " இந்த பாறை " என்று சொன்னார்.. அது பேதுருவை குறித்து அல்ல, மாறாக தம்மைக்குறித்தே அப்படி சொன்னார். (மத்தேயு 16: 18) அவரே சபைக்கு மூலைக்கல்லாக இருக்கின்றார். (எபேசியர் 2: 20) பேதுருவோ, மகதலேனா மரியாளோ அல்ல. 1பேதுரு 2: 7ல் பேதுருவே அதற்கு சாட்சி கொடுக்கின்றார்.



டா வின்சி கோட்: 80 க்கும் மேற்பட்ட சுவிசேஷங்கள் இருந்தன, இப்போது நான்கு சுவிசேஷங்கள் மட்டும் தான் இருக்கின்றது. (மத்மேயு மாற்கு, லூக்கா, யோவான்)

பதில்: உண்மையில் இது ஒரு மடமைத்தனமான கருத்து, கனோனால் தெரிவு செய்யப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) தவிர்த்து, இன்னும் வேறு 12 சுவிசேஷங்கள் தான் அந்த நேரத்தில் உலாவி வந்தது. ஆனால் அவைகள் சரியாக தெய்வீக வழிகாட்டுதலை அறிவிக்கவில்லை. அவைகளுடன் Gnostic சுவிசேஷமும் பிற்காலங்களில் வந்தது. ஆனால் அவைகள் எழுதப்பட்ட காலங்கள் மிகவும் பிந்தியதால் அவைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆதி சபை காலத்தில் கிறிஸ்தவர்களின் மத்திய இடங்களாக எருசலேம், கொரிந்து, அலெக்ஸாந்திரியா மற்றும் ரோமாபுரி காணப்பட்டது. இங்கே அவர்கள் இந்த நான்கு சுவிNசுஷத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.

கி.பி 95- 170க்கும் முன்பு வாழ்ந்த கிறிஸ்தவ தலைவர்கள் இந்த நான்கு சுவிNசுஷங்களையும் தான் பாவித்து வந்தார்கள்.



க்ளெமென்ட்(Clement): ரோமாபுரியிலிருந்த சபையில் கி.பி 95 அளவில் மூப்பராக இருந்தவர், இவர் கொரிந்து சபைக்கு எழுதிய கடிதத்தில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நிருபங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்து எழுதினார்.



பப்பியாஸ்(Papias): இவர் ஒரு பிஷப். இவர் எழுதிய புத்தகம் நுஒpழளவைழைn ழக ழுசயஉடநள ழக வாந டுழசன . இவர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார்.



ஜஸ்ரின் மார்டிர் (Justin Martyr): இவர் கி.பி 140 வேதாகமத்தில் 4 சுவிசேஷங்களைப்பற்றியும் எழுதினார்.



பொலிகார்ப் (Polycarp): இவர் அப்போஸ்தலர் யோவானின் சீஷன். கி.பி 150ல் வாழ்ந்தவர். இவர் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்களை இயேசுவின் வசனங்களாக குறிப்பிட்டிருக்கின்றார்.



இரேனியுஸ் (Ireneus): இவர் பொலிகார்ப்பின் சீடர். கி.பி 170ல் இவர் மேற்கோள் காட்டி புதியேற்பாட்டின் 23 புத்தகங்களை எழுதினார். இவர் தவறவிடப்பட்ட புத்தகங்கள் பிலேமோன், யாக்கோபு, 2 பேதுரு, 3 யோவான்.



பப்பிரஸ் 45: கி.பி 200ஐ சார்ந்தது. 4 சுவிசேஷங்களையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

The Muratorian Fragment: கி.பி 175ஐ சார்ந்தது. இதிலும் 23 சுவிசேஷங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.



டா வின்சி கோட்: சவக்கடல் சுருள்கள் 1950ல் கண்டுபிடிக்கப்பட்டது.
பதில்:சவக்கடல் சுருள்கள் 1947ம் ஆண்டுதான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிற்பாடு ஆய்வாளர்கள் தொடர்ந்து அங்கே அகழ்வாராய்ச்சி செய்தார்கள்.


டா வினசி கோட்: கி.பி 1099ல் பிரான்ஸ் அரசன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இரகசிய சங்கமான "Priory of Sion". அங்கே இயேசுவின் வம்சம் பற்றிய தகவல்களையும், மகதலேனாவைப்பற்றிய தகவல்களையும் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டது.
பதில்:கி.பி 1956ம் ஆண்டு தான் "Priory of Sion" பிரான்ஸ் நாட்டை சார்ந்த Pierre Plantatard என்பரவால் சவிஸில் உள்ள ஜெனிவாவுக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டது. சியோன் என்பது ஜெனிவாவில் உள்ள சிறு மலை. எருசலேமில் உள்ள சீயோனை குறிக்கவில்லை.



டாவின்சி கோட்: சாலமோன் தேவாலயத்தில் கட்டப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வந்து இறங்கிய ஷெக்கினா என்பது யெகோவா தேவனுக்கு இணையான ஒரு பெண் சக்தி.
பதில்: இது உண்மையில் மடமைத்தனம், ஷெக்கினா என்பது யெகோவா தேவனுடைய மகிமை. வேதம் சொல்கின்றது, ஒரே ஒரு கடவுள் தான். வேறு கடவுள்கள் இல்லை என்று.


நன்றி
: http://www.tamilchrist.ch

No comments:

Post a Comment