"இயேசுவினிடம் கேட்டால்தான் கிடைக்கும். புரட்சித்தலைவியிடம் கேட்காமலே கிடைக்கும்"
-முன்னாள் தமிழக அமைச்சர் ஜனார்த்தனன்.
பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன் கடவுளா? உலக பாவங்களுக்காக பலியான கிறிஸ்து கடவுளா?"
-சென்னை மெரினா பீச்சில் அறிஞர் அண்ணா
"புதுவை கிறிஸ்தவர்கள் மாநிலமாக மாறுகிறது. அதை தடுக்க கிளர்ச்சி நடத்துகிறோம்"
-RSS தலைவர் இராமகோபாலன் 13/3/1994 தினகரன்
"இந்து சமுதாயம் பலமுனை தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.நமது நாட்டில் இந்து எழுச்சி ஏற்ப்பட்டுள்ளது.நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும்.இதன் மூலம் இந்தியாவில் இந்து சாம்ராஜ்யம் உருவாகும்"
-தமிழக இந்து முண்ணணி அமைப்பாளர் ராம கோபாலன் 2/11/1995 தினமலர்
"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் 20-11-1993 மாலைமலர் தேன்மலர்
"விலங்குகள் கோவிலுக்குள்ளே செல்லலாம்.மனிதர்கள் மட்டும் கூடாது.அதனால் மனிதர்களை மனிதர்களாக மதிக்கற மதத்துக்கு செல்கிறோம் என்கிறார்கள். அதில் என்ன தவறு? அது அவர்கள் விருப்பம்.யாருக்கு எந்த மதம் விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றலாம். அனைத்துக்கும் அனுமதி கொடுப்பதே மதசார்பற்ற தன்மை. மத சார்புள்ள இஸ்ரேலில் கூட ஜெருசலேம் மசூதியை இடிக்க விடாது ராணுவம் 3 முறை விரட்டியடித்தது"
-வை.கோ 9-1-1994 தினகரன்
நன்றி : www.thewayofsalvation.org
Tuesday, December 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment